எம்மைப்பற்றி
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் வருடாவருடம் சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவுசெய்து. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் எதிர்வரும் ஆடி (யூலை) மாதம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
***சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்றவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்.